Monday, June 21, 2010

கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி

செம்மொழி மாநாடு : கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி : தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு
ஜூன் 22,2010,00:19
சென்னை: நாளை கோவையில் துவங்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கற்கும் விதமாக 2 நாள் முன்னதாக நேற்று கோவை புறப்பட்டு வந்தார் முதல்வர் கருணாநிதி. இவருக்கு தாரை, தப்பட்டை முழங்கிட சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து தங்கும் ரெசிடன்சி ஓட்டலுக்கு சென்ற போது வீதியின் இரு வழிகளிலும், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் கையசைத்து வரவேற்றனர். இவரது வருகையை முன்னிட்டு அவிநாசி சாலையில் ஆங்காங்கே தாரை, தப்பட்டை வாத்தியங்கள் முழங்கின. நேற்று மதியம் 12. 30 மணியளவில் விமானம் மூலம் கோவை வந்தார். இவருடன் அமைச்சர்கள், ஆற்காடு வீராச்சாமி, பொன்முடி, தலைமைச்செயலர் ஸ்ரீபதி ஆகியோர் உடன் வந்தனர். துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் வரவேற்றனர்.

No comments:

Post a Comment