Tuesday, August 10, 2010

இளைஞர்மணிதெரியுமா உங்களுக்கு

இளைஞர்மணிதெரியுமா உங்களுக்கு?


First Published : 11 Aug 2010 02:50:51 AM IST

Last Updated :


இந்தியாவில் உள்ள வெளிநாட்டு வங்கிகள்


வெளிநாட்டு வங்கிகளின் வரவு தவிர்க்க முடியாததாகிவிட்டது. முதன்முதலில் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்த வெளிநாட்டு வங்கி ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி. இது 1858-ல் இந்தியாவில் தனது கிளையைத் தொடங்கியது. அதன்பிறகு 1902-ல் சிட்டி வங்கி தனது கிளையை தொடங்கியது.



பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1953-ல் ஹாங்காங் அண்ட் ஷாங்காய் பாங்கிங் கார்ப்ட்ரேஷன் (ஹெச்எஸ்பிசி) செயல்படத் தொடங்கியது. 1990ல் உலகமயமாக்கலும், பொருளாதாரமயமாக்கலும் அரங்கேறிய சமயத்தில் பல வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் தங்கள் கிளைகளைத் தொடங்க ஆரம்பித்தன. ஏறக்குறைய உலகின் அனைத்து முன்னணி வங்கிகளும் தங்கள் கிளைகளை இந்தியாவில் தொடங்கியுள்ளன.



இங்குள்ள வெளிநாட்டு வங்கிகளில் புதிய தொழில்நுட்பங்களும் புதிய வங்கிக் கொள்கைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக உள்நாட்டு வங்கிகளும் தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறின.



தற்போது இந்தியாவில் மொத்தம் 29 வெளிநாட்டு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமான சில:



வெளிநாட்டு வங்கிகள்



ஏபிஎன் ஆம்ரோ வங்கி



அபு தாபி கமர்ஷியல் வங்கி



பாங்க் ஆப் சிலோன்



பிஎன்பி பரிபாஸ் வங்கி



சிட்டி வங்கி



சைனா டிரஸ்ட் கமர்ஷியல் வங்கி



டாயிஷ் (ஜெர்மனி) வங்கி



ஹெச்எஸ்பிசி வங்கி



ஜேபி மோர்கன் சேஸ் வங்கி



ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி



ஸ்காட்டியா (கனடா) வங்கி



தயிப் (பஹ்ரைன்) வங்கி

No comments:

Post a Comment