Friday, April 1, 2011

தி.மு.க கூட்டணி அறிக்கை

தி.மு.க கூட்டணி அறிக்கை
பரம ஏழைகளுக்கு கிலோ ரூ. 1 விலையில் மாதந்தோறும் வழங்கப்படும் 35 கிலோ அரிசி, இனி மேல் இலவசமாகவே வழங்கப்படும்
60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு உள்ளூர் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய பாஸ் வழங்கப்படும்
இலவசமாக கிரைண்டர் அல்லது மிக்சி
குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை
அரசு கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும்
முதியோர், ஆதரவற்ற பெண்களுக்கான உதவித்தொகை ரூ. 750 ஆக உயர்த்தப்படும்
வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கப் படும் தொகை ரூ. 75 ஆயி ரத்தில் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும்
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடனு தவி, ரூ. 4 லட்சமாக உயர்த் தப்படும்
சென்னை அருகே குறைந்த வாடகை கொண்ட வீடுகள் கட்டித் தரப்படும்
குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை
ரேஷன் கடைகளில் கிலோ அரிசி 1 ரூபாய் திட்டம், மானிய விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மளிகை, கோதுமை மாவு வழங்கும் திட்டம்
உழவர் சந்தை போன்று, நகர்ப்புறங்களில் நுகர்வோர் சந்தைகள் அமைக்கப்படும்
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண, சென்னை அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும்
திருநங்கைகளுக்கும் சுய உதவிக் குழுக்கள் அமைக்க நடவடிக்கை
ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ இலங்கை அரசை வற்புறுத்துவோம்
தடையின்றி மின்சாரம் கிடைக்க மின்உற்பத்தி திட்டங்கள் அதிகரிக்கப்படும்
விவசாய நிலங்கள், வீட்டு மனைகளாக மாற்றுவது தடுக்கப்படும்
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் 3 இலவச சீருடைகள் வழங்கப்படும்
கல்வியை மாநில அரசு பட்டியலில் கொண்டு வர வலியுறுத்தப்படும். தரமான இலவச கல்வி அளிக்க அரசு பள்ளிகளின் தரம் உயர்த் தப்படும்
தனியார் மருத்துவமனைகளில் கட்டணங்களை ஒழுங்குப் படுத்த அரசு சார்பில் மருத்துவ கட்டண ஒழுங்கு முறை ஆணையம் அமைக் கப்படும்

No comments:

Post a Comment